#anbilmahesh #anbilmaheshspeech அமைச்சர் அன்பில் மகேஷ் உருக்கமான பேச்சு மலேசியாவுக்கு நான்கு நாட்கள் கல்வி சுற்றுலா செல்லக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு தாம் தான் அம்மா, அப்பா என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உருக்கமாக தெரிவித்தார். பல்வேறு போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 42 அரசு பள்ளி மாணவர்கள், நான்கு நாட்கள் கல்வி சுற்றுலாவாக மலேசியா செல்கின்றனர். இதையொட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மலேசியாவுக்கு கல்வி சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவர்களைப் பற்றி பெற்றோர் கவலைப்பட வேண்டாம் என உருக்கமாக தெரிவித்தார்.