EV Velu | திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளது. திருவண்ணாமலை மலப்பம்பாடி ஏரியில் சட்டவிரோதமாக மண் எடுத்து, எ.வ.வேலுவின் குடும்பத்தினருக்குச் சொந்தமான இடத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டு நிலத்தைச் சமன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 8 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாகவும், ஏரிக்கரையை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.