DMK | வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் - திரண்டு வந்து ஆரத்தி எடுத்த பெண்கள் #dmk #campaign #thanthitv தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் பழனியப்பன், கடத்தூரில் திமுக தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்தார்.... பின்னர் பாப்பம்பாடி, காந்திநகர், பாரதிபுரம், இருளப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று வீடு வீடாக வாக்கு சேகரித்தார். அப்போது திமுக அரசின் சாதனைகளை விளக்கி, உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரிய அவருக்கு, பெண்கள் திரண்டு வந்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். கிராமப்புற மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன் என பழனியப்பன் உறுதி அளித்துள்ளார்...