Cumbum MLA | 2 ஆண்டுகளில் மக்கள் பிரச்சனை தீரும் - கம்பம் எம்.எல்.ஏ பேச்சு
E2 ஆண்டுகளில் மக்கள் பிரச்சனை தீரும் - கம்பம் எம்.எல்.ஏ பேச்சு தமிழகத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் மக்கள் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படும் என கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா, உத்தமபாளையத்தில் நடந்த மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.. அப்போது பேசிய அவர், 'தமிழகத்தில் 2 ஆண்டுகளில் மக்கள் பிரச்சினைகள் முழுவதுமாகத் தீர்க்கப்படும்' எனக் குறிப்பிட்டார். முன்னதாக, விவசாயிகள் கோரிக்கையை ஏற்று சிந்தளச்சேரியில் ஆக்கிரமிப்பிலுள்ள உடைக்குளம் கண்மாயை நேரில் சென்று ஆய்வு செய்தார்.