தமிழகத்தில் ராகுல் காந்தி கை காட்டிய அந்த ஒரு நபர் - யார் இந்த கிறிஸ்டோபர் திலக் ராஜ்யசபா தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் புது முகமான கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் வடகிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராக உள்ளார். பொறியியல் படிப்பை முடித்தவரான கிறிஸ்டோபர் திலக், ராகுல் காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் எனக் கூறினார்.