அரசியல்

"நாட்டில் பதற்றத்திற்கு அமித் ஷா தான் காரணம்" - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்த சட்டம் விவகாரத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் காரணம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டம் விவகாரத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் காரணம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் எனஅமித் ஷா தெரிவித்ததும் பதற்றத்திற்கு காரணம் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் நடக்கும் போராட்டத்திற்கு மத்திய பா.ஜ.க அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஆனந்த் சர்மா குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உண்மையிலேயே கவலைக் கொண்டிருந்தால், உடனடியாக தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் கூட்டத்தை அவர் கூட்டி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் ஆனந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"