அமைச்சர் கே.என்.நேரு வழக்கு - ஐகோர்ட் போட்ட உத்தரவு அமைச்சர் கே.என்.நேரு நிர்வகிக்கும் நகராட்சி நிர்வாக துறை பணி நியமனத்தில், முறைகேடு நடந்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கே.என்.நேரு மீதான வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொண்டு, திமுக சட்டத்துறை தவிடு பொடியாக்கும் என்று தெரிவித்துள்ளார்.