திமுக எம்.எல்.ஏ. கல்குவாரியில் கிடந்த மாற்றுத்திறனாளி சடலம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காணாமல் போன மாற்றுத்திறனாளி இளைஞர், திமுக எம்.எல்.ஏ.வின் கல்குவாரியில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரளைப்பட்டியை சேர்ந்த 25 வயது மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி கருப்பன். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் இவரது சடலம் அதே பகுதியில் உள்ள திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியின் கல்குவாரியில் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. குவாரி தொழிலாளர்கள் மணலை ஜேசிபி மூலம் தோண்டும் போது இந்த சடலத்தை பார்த்துள்ளனர். சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை, இந்த சம்பவத்தில் போலீசார் உரிய விசாரணையை நடத்தி, உண்மையை வெளிக்கொணர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.