AIADMK | Rajendra Balaji | "தமிழகம் முழுவதும் ஈபிஎஸ்-ஐ முதல்வராக்க வேண்டும் என்ற அலை வீசுகிறது" - KTR #EPS #RajendraBalaji #AIADMK அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க வேண்டும் என்ற அலை தமிழகம் முழுவதும் வீசுவதாக, முன்னாள் அமைச்சரும், சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சிவகாசியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், திமுகவினர் பொய்ப் பிரசாரங்களை செய்து வருவதாக சாடினார். அதிமுக தொண்டர்களின் 5 ஆண்டு கால உழைப்பிற்குப் பலன் கிடைக்கும் நேரம் வந்துவிட்டதாகவும், அதிமுகவிற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், என்டிஏ கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதாகவும் கூறினார்.