கேரளா எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் கூவப்பாராவில், தனியார் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானையை மீட்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்...
தகவலறிந்த வனத்துறையினர், ஜேசிபி உதவியுடன் கிணற்றின் ஒரு பகுதியை தோண்டி யானையை பாதுகாப்பாக மீட்கும் பணியில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரம், குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் அடிக்கடி வருவதால், அவற்றை வனப்பகுதிக்கே விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.