Viral Video | Police | மறுவாழ்வு மையத்திலிருந்து 40 பேர் தப்ப முயற்சி.. அதிர்ச்சி வீடியோ பஞ்சாப்பில் போதை மறுவாழ்வு மையத்திலிருந்து 40 பேர் தப்ப முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மொஹாலியில் அமைந்துள்ள போதை மறுவாழ்வு மையத்தில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை தாக்கிவிட்டு கதவை உடைத்து கொண்டு அவர்கள் தப்பியோட முயன்றனர். இருப்பினும் பாதுகாவலர் கதவை இழுத்து பிடித்து தடுத்து நிறுத்தியதால், அவர்களது தப்பிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்த மோதலில் அங்கு பணிபுரியும் மூன்று ஊழியர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.