தெருவில் நடந்து சென்ற பெண்ணுக்கு நொடியில் நடந்த ஷாக் - அதிர்ச்சி வீடியோ உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில், தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து தங்கச் செயின் பறிக்கப்பட்டுள்ளது... இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றனர். இதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரை கீழே தள்ளிவிட்டு தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.