ரூ.100 தகராறில் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில், குடும்பத் தகராறில் கணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொன்றதாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், 100 ரூபாய் பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, மது அருந்திய கணவர் அவமானப்படுத்தியதாகவும், அவர் தூங்கியபோது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்