மத்திய அரசின் கடன் சுமை நடப்பு நிதியாண்டின் இறுதியில், 228 லட்சம் கோடியாக உயரும் என மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை கேள்வி நேரத்தில் பேசிய அவர், கடந்த நிதியாண்டில் கடன் சுமை 211 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்றும், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 58.2 சதவீதமாக இருந்ததாகவும் கூறினார்.