இந்தியா

"விவசாயிகள், பெண்கள் பாதுகாப்பில் பா.ஜ.க. அரசு தோல்வி" - குடியுரிமை திருத்த சட்டம் குறித்து உத்தவ் தாக்கரே கருத்து

அரசின் தோல்விகளை மறைக்கவே, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் என பா.ஜ.க.வை, சிவசேனா மறைமுகமாக சாடியுள்ளது.மேலும் இது வினாயகர் தாமோதர் சாவர்க்கரின் கொள்கைக்கு எதிரானது என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள, சட்டத் திருத்தம், வினாயகர் தாமோதர் சாவர்க்கரின், சிந்து நதியில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள பகுதிகள் ஒரே நாடு என்ற கொள்கையை அவமதிப்பதாக உள்ளது என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகள் பிரச்சனை மற்றும் புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பா.ஜ.க. அரசு தோல்வி அடைந்துள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த தோல்விகளை மறைக்கவும், மக்களை தி​சை திருப்பவுமே இந்த குடியுரிமை சட்டத்திருத்தம் தற்போது செய்யப்பட்டு உள்ளதாகவும், நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கின்றது என பார்ப்போம் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். அதன் பின்னர் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்