பேருந்து¤ மோதி 2 வயது சிறுவன் உடல் நசுங்கி உயிரிழப்பு
உயிரிழப்புகர்நாடக மாநிலம் ஹாவேரி நகர பேருந்து நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடைக்குள் புகுந்த அரசுப்பேருந்து மோதி 2 வயது சிறுவன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ப்ரீத்....
விபத்தில் சாவனூரை சேர்ந்த ஹஸ்ரத் அலி என்ற சிறுவன் பலியான நிலையில், 3 பயணிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்ததே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மஞ்சுநாத் தப்பியோடிய நிலையில், போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.