சமோசா வாங்க ரயிலை நிறுத்திய ஓட்டுநர் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே, சமோசா வாங்குவதற்காக ரயிலை பாதியிலேயே நிறுத்தியதாகக் கூறப்படும் ரயில் ஓட்டுநரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர்–மௌ ரயிலின் ஓட்டுநர், ரயிலை நிறுத்தை தண்டவாளம் அருகே இருந்த கடையில் 10 சமோசாக்களை வாங்கிச் சென்றதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக விசாரணைக்கு இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது. வீடியோவில் இடம்பெற்றிருப்பது எந்த ரயில், ஓட்டுநர் யார், சம்பவம் நடந்த இடம் எது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ரத்லம் ரயில்வே பிரிவு மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.