திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை மற்றும் வார விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இலவச தரிசனத்திற்காக டோக்கன் பெறாத பக்தர்கள் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு முன்பதிவு செய்தவர்களும் 3 முதல் 5 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி திருமலையில் நேற்று மட்டும் சுமார் 71 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் காணிக்கையாக மட்டும் 3 கோடி 52 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை சீசன் தொடரும் நிலையில், கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.