இந்தியா

ஏழுமலையான் கோவில் வருடாந்திர புஷ்ப யாகம் : 7 டன் மலர்களால் உற்சவருக்கு புஷ்ப யாகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 7 டன் மலர்களை கொண்டு வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெற்றது.

தந்தி டிவி

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் புஷ்ப யாகத்தை முன்னிட்டு, பெங்களூரு, ஹைதராபாத் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ரோஜா, முல்லை, மல்லி, சம்பங்கி, சாமந்தி என 27 ரகமான மலர்களால் உற்சவருக்கு புஷ்ப யாகம் நடத்தப்படும். இந்த யாகத்திற்காக 7 டன் எடையுள்ள பூக்களை தமிழகத்தை சேர்ந்த பக்தர் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்நிலையில் நெய்வேத்தியத்திற்கு பிறகு உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி கல்யாண உற்சவ மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பால், தயிர், இளநீர் மஞ்சள், சந்தனம் கொண்டு திருமஞ்சனம் செய்யப்பட்டு பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை புஷ்ப யாகம் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''