இந்தியா

வனப்பகுதியில் வெட்டிக்கடத்த முயன்ற ஒன்றரை கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பதி அருகே வனப்பகுதியில் வெட்டிக்கடத்த முயன்ற ஒன்றரை கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தந்தி டிவி

பூபால் காலனி வனப்பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்த லாரியை செம்மரக்கடத்தல் தடுப்பு போலீஸார், சோதனை செய்தனர்.

லாரியின் பதிவு எண் போலியாக இருந்ததை அடுத்து, போலீஸார் மறைவான இடத்தில் இருந்து கண்காணித்தனர். அப்போது, வனப்பகுதியில் இருந்து வெட்டப்பட்ட செம்மரங்களை லாரியில் ஒரு கும்பல் ஏற்றியது.

அவர்களை போலீஸார் சுற்றிவளைக்க முயன்றபோது, செம்மரங்களை போட்டு விட்டு அந்தகும்பல் தப்பியது. இதையடுத்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான 140 செம்மரக்கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்