கேரள மாநிலம் கண்ணூரில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் விராஜ் பேட்டை நோக்கிச் சென்ற அந்தப் பேருந்து, பயணிகள் யாருமின்றி திரும்பியபோது இந்த சம்பவம் நடைபெற்றது. தீப்பிடித்ததும் ஓட்டுநரும், கிளீனரும் கீழே குதித்ததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.