டார்க்நெட் மற்றும் ரகசிய செயலிகள் மூலம் நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த "டீம் கல்கி" என்ற கும்பல், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் சிக்கியது. டெல்லியில் நடத்தப்பட்ட சோதனையில் எல்.எஸ்.டி., எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அனுராக் தாக்கூர் மற்றும் விகாஸ் ரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். டார்க்நெட் தளம் மற்றும் ரகசிய செயலிகள் மூலம் வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்களை வாங்கி, பார்சல் மற்றும் கூரியர் சேவைகள் மூலம் இந்தியா முழுவதும் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.