இந்தியா

Russia Ukraine War | ரஷ்ய போரில்.. இந்தியா சொன்ன பேரதிர்ச்சி தகவல்

ரஷ்ய போரில்.. இந்தியா சொன்ன பேரதிர்ச்சி தகவல்

thanthitv

Russia Ukraine War | ரஷ்ய போரில்.. இந்தியா சொன்ன பேரதிர்ச்சி தகவல்

#russiaukrainewar #india

ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்த இந்தியர்கள்

ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்த இந்தியர்கள் குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் ஒன்றை சமர்பித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ஏராளமான இந்தியர்களை ரஷ்யா கட்டாயப்படுத்தியதாகவும், அவர்களை உடனடியாக் மீட்கக் கோரி திவ்யா என்ற நபர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் குற்றச்சாட்டினார். இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது ரஷ்யா, உக்ரைன் போரில் இதுவரை 10 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜெனரல் ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் போரில் ஈடுபட்ட இந்தியர்களில் சிலர் தங்களது விருப்பத்துடன் தான் சென்றுள்ளதாகவும், சிலர் ஏஜென்ட்கள் மூலம் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

மொத்தமாக 215 இந்தியர்கள் ரஷ்யா சென்றுள்ளதாகவும், அவர்களின் நிலை குறித்து வெளியுறவு துறை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Breaking | Vijay | JanaNayagan | ஜனநாயகன் லீக்.. எடிட்டர் மீது அதிரடி நடவடிக்கை - பரபரப்பு உத்தரவு

BREAKING || தமிழகமே பரபரத்த சுவாதி கொலை.. கைதான ராம்குமார் த*கொலை வழக்கு - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || நாட்டையே அதிரவைத்த விருதுநகர் பயங்கரம்... தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு

BREAKING || தமிழகத்தையே உலுக்கிய காம கொடூரனுக்கு தூ*கு தண்டனை - அதிரடி தீர்ப்பு

BREAKING || தீயாய் பரவிய வீடியோ... தேர்தல் முடிந்த மறுநாளே விஜய்க்கு பறந்த லெட்டர்