சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கத் திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசிய தலைவர் முருகன், தெரிவித்தார். கேரள அரசு இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், பக்தர்கள் குறைந்தது 10 விநாடிகளாவது தரிசனம் செய்யத் தேவசம்போர்டு வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், பக்தர்களுக்குத் தேவையான அன்னதானம் வழங்கத் தங்களுக்கு அனுமதி தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.