இந்தியா

சர்வதேச கடத்தல்காரனை கைது செய்த ஆந்திர போலீசார் - ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்

சர்வதேச அளவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்த ஆந்திர போலீசார், அவர்களிடமிருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி
சர்வதேச அளவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்த ஆந்திர போலீசார், அவர்களிடமிருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்ட எஸ்.பி. அபிஷேக் மஹந்தி தலைமையிலான போலீசார், கடந்த நவம்பர் 24-ஆம் தேதி பெங்களூரை சேர்ந்த மூசா மற்றும் கயாஜ் அகமது ஆகியோரை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் கம்பளிப்புரம் , ஹோஸ்கோட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களை பறிமுதல் செய்ததுடன், நயுஜ் என்கிற சர்வதேச கடத்தல்காரனையும் கைது செய்துள்ளனர்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு