இந்தியா

சர்வதேச கடத்தல்காரனை கைது செய்த ஆந்திர போலீசார் - ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்

சர்வதேச அளவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்த ஆந்திர போலீசார், அவர்களிடமிருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி
சர்வதேச அளவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்த ஆந்திர போலீசார், அவர்களிடமிருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்ட எஸ்.பி. அபிஷேக் மஹந்தி தலைமையிலான போலீசார், கடந்த நவம்பர் 24-ஆம் தேதி பெங்களூரை சேர்ந்த மூசா மற்றும் கயாஜ் அகமது ஆகியோரை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் கம்பளிப்புரம் , ஹோஸ்கோட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களை பறிமுதல் செய்ததுடன், நயுஜ் என்கிற சர்வதேச கடத்தல்காரனையும் கைது செய்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"