இந்தியா

ரிசர்வ் வங்கி அமலாக்கும் "பாஸிட்டிவ் பே" - வரும் புத்தாண்டு முதல் அதிரடி நடைமுறை

காசோலை மோசடிகளை தடுக்க, வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பாஸிட்டிவ் பே என்ற புதிய பாதுகாப்பு முறையை ரிசர்வ் வங்கி அமல்படுத்த உள்ளது.

தந்தி டிவி

பாஸிட்டிவ் பே என்ற புதிய முறையில், 50 ஆயிரம் ரூபாய்க்கும்

அதிகமான காசோலையை வழங்கும் நபர், அதை பற்றிய சில அடிப்படை தகவல்களை வங்கியின் இணைய தளம், குறுஞ்செய்தி, வங்கியின் செயலி அல்லது ஏ.டி.எம் மூலம் தனது வங்கிக்கு தெரியப்படுத்த வேண்டும். காசோலை தேதி, தொகை, பெறுபவரின் பெயர் போன்ற தகவல்களை அளிக்க வேண்டும். இந்த காசோலைகளை பரிவர்த்தனை செய்யும் மையங்கள், எலக்ட்ரானிக் முறையில் வங்கியுடன் சரி பார்த்த பின், அவற்றை அங்கீகரிக்கும். இந்த தகவல்களில் ஏதாவது முரண்பாடுகள் இருந்தால் அவற்றை களைய, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தில் அனைத்து வாடிக்கையாளர்களும் சேர அனுமதி உண்டு என்றாலும் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் காசோலை அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது கட்டாயமாக்கப்படும். இதன் மூலம் காசோலை முறைகேடுகள், மோசடிகளை தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்