உத்தரபிரதேச மாநிலத்தில் ரீல்ஸ் மோகத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர்களுக்கு காவல் துறை 33 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நொய்டாவில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய இளைஞர்கள், இளம்பெண்களுடன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டனர். இதை அறிந்த நொய்டா காவல்துறை, அவர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 33 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது