இந்தியா

வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் வரும் திங்கள் முதல் மக்கள் குறைகளை கேட்கிறார் கிரண்பேடி

வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் பொது மக்களிடம் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீண்டும் குறைகளை கேட்கும் நிகழ்வு வரும் திங்கள் முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
புதுச்சேரி ஆளுநர் மாளிகை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வரும் திங்கள் முதல் புதன்கிழமை வரை மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பு மூலம் மட்டுமே துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மக்களின் குறைகளை கேட்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்பாக இதற்காக ஆளுநர் மாளிகையின் தொலைபேசி எண்ணில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ