தெலங்கானா மாநிலத்தில் ஆறு பேரை கொலை செய்த சைக்கோ கொலையாளி ராஜ்குமார், வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி பாலியல் குற்ற வழக்கில் ஜாமினில் வெளியே வந்த அவர், சிறுமி உள்பட புகார் அளித்த குடும்பத்தைச் சேர்ந்த மூவரையும், பின்னர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் வனப்பகுதியில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அருகில் கிடந்த செல்போனில் பதிவான செல்பி வீடியோ மற்றும் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.