இந்தியா

மின்கலன்களால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்கலன்களால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்கலன்களால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 2025 ஆண்டுக்கு பிறகு நகரப் பகுதியில் மின்கலன்களால் இயங்கும் 4 சக்கர வாகனங்களை மட்டுமே அனுமதிக்க நிதி ஆயோக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுத திட்டமிட்டுள்ளது. கார் உள்ளிட்ட வாகன உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முடிவு செய்துள்ளார். படிப்படியாக மின்கலன்களால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி