தலைநகர் டெல்லியில் திடீரென வீசிய புழுதிப் புயலால் பரபரப்பு ஏற்பட்டது. கர்த்தவ்யா பாதை மற்றும் இந்தியா கேட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் வீசிய புழுதிப் புயலால் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். புழுதிப் புயலைத் தொடர்ந்து டெல்லியில் வெப்பநிலை குறைந்து, இதமான வானிலை நிலவத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.