மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில், ஆனந்த சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து 10 நாட்கள் கழித்து கொண்டாடப்படும் இந்த விழாவை பழங்குடியின மக்கள் ஆனந்த சதுர்த்தி என அழைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில், விநாயகர், காளி, உள்ளிட்ட பல்வேறு கடவுளர்களின் தத்ரூபமான நகரும் சிலைகள் இடம்பெற்றன. மேலும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் இந்த நிகழ்வில் இடம்பெற்றன.