மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காதலனால் விட்டுச் செல்லப்பட்ட மாடல் அழகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் லட்சுமி அஹிர்வார், தனது மகள் கொலை செய்யப்பட்டதாகக் கூறி மருத்துவமனைக்கு வெளியே கதறி அழுதார். அவரது உடலில் காயங்கள் இருந்ததை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். காசிம் என்பவரை மாடல் அழகி குஷ்பு காதலித்ததாகவும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்பு காசிமை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.