இந்தியா

லக்கி பாஸ்கராக நினைத்து மாநிலத்தையே பரபரப்பாக்கிய பள்ளி மாணவர்கள்.. - சிக்கியது எப்படி?

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 'லக்கி பாஸ்கர்' பட பாணியில் பள்ளி விடுதியில் இருந்து ஓடிய 9 ஆம் வகுப்பு மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்

மகாராணிப்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி விடுதியில் இருந்து 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேர், 'லக்கி பாஸ்கர்' படத்தில் வருவதுபோல, பணம், வீடு, கார் ஆகிவற்றை சம்பாதித்து திரும்ப வேண்டும் எனக் கூறி, விடுதியில் இருந்து ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பள்ளி மாணவர்கள் 4 பேர் மாயமானது பற்றி விடுதி நிர்வாகம் அளித்த புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசித் தேடி வந்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய, மாணவர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். இந்நிலையில், மாணவர்கள் 4 பேரை போலீசார் விஜயவாடாவில் பிடித்துள்ளனர். தொடர்ந்து, அவர்களை விசாகப்பட்டினம் அழைத்து வந்த போலீசார் பெற்றோர்களிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"