இந்தியா

கேரளா : புத்தகம், சீருடைகள் இல்லாமல் வந்த மாணவர்கள்

கேரள மாநிலத்தில் மழை நீர் வற்றியதால் இன்று பள்ளி மீண்டும் திறந்த நிலையில், சீருடைகள் இன்றி மாணவர்கள் வந்தனர்.

தந்தி டிவி
கேரள மாநிலத்தில் வெள்ள பாதிப்பிற்கு பின்னர், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மன வலிமைக்கான உளவியல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் நீரில் மூழ்கிய நிலையில், ஜூலை 13 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. தற்போது, மழை நீர் வற்றியதால் இன்று பள்ளி மீண்டும் திறந்த நிலையில், சீருடைகள் இன்றி மாணவர்கள் வந்தனர். வெள்ளத்தில் புத்தகம் சீருடைகள் அடித்துச் செல்லப்பட்டதால், மாணவ, மாணவிகள் வெறும் பைகளுடன் பள்ளி வந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் மன வலிமைக்கான உளவியல் பயிற்சியை வழங்கினர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"