இந்தியா

கேரளா : புத்தகம், சீருடைகள் இல்லாமல் வந்த மாணவர்கள்

கேரள மாநிலத்தில் மழை நீர் வற்றியதால் இன்று பள்ளி மீண்டும் திறந்த நிலையில், சீருடைகள் இன்றி மாணவர்கள் வந்தனர்.

தந்தி டிவி
கேரள மாநிலத்தில் வெள்ள பாதிப்பிற்கு பின்னர், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மன வலிமைக்கான உளவியல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் நீரில் மூழ்கிய நிலையில், ஜூலை 13 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. தற்போது, மழை நீர் வற்றியதால் இன்று பள்ளி மீண்டும் திறந்த நிலையில், சீருடைகள் இன்றி மாணவர்கள் வந்தனர். வெள்ளத்தில் புத்தகம் சீருடைகள் அடித்துச் செல்லப்பட்டதால், மாணவ, மாணவிகள் வெறும் பைகளுடன் பள்ளி வந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் மன வலிமைக்கான உளவியல் பயிற்சியை வழங்கினர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்