கோழிக்கோடு அடுத்த சாத்தமங்கலம் அருகே முன்னூர் பகுதியை சேர்ந்த சிறுவன், நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்தான். சிறுவன் வீட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரமுள்ள பகுதியை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, சாலைகள் மூடபப்பட்டன. சிறுவனுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனையில் நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கு இல்லாததால் கட்டுப்பாட்டு மண்டலத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தேட் லோஹித் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.