இந்தியா

சந்திராயன் II : ஜூலை 9 - 16க்குள் விண்ணில் பாயும்

நிலவுக்கு, சந்திராயன்-2 செயற்கைகோளை ஜூலை மாதத்தில் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

நிலவுக்கு, சந்திராயன்-2 செயற்கைகோளை ஜூலை மாதத்தில் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கூறியுள்ள இஸ்ரோ, ஜூலை 9 முதல் 16ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.3 ராக்கெட் மூலம் நிலவுக்கு செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படும் இந்த செயற்கைகோளை, செப்டம்பர் 6 ஆம் தேதிக்குள் சந்திரனில் நிலைநிறுத்த, இஸ்ரோ திட்டமிட்டுள்து. இதனிடையே, சந்திராயன்-2 தொடர்பான பணிகளை முடிக்க கூடுதல் நாட்கள் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்