இந்தியா

பிரம்மபுத்திராவில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் : சீனா எச்சரிக்கை

சீன எச்சரிக்கையை தொடர்ந்து அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதிக்கரையில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

சீன எச்சரிக்கையை தொடர்ந்து அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதிக்கரையில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. திபெத்தில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து அங்கு பாயும் சியாங் ஆற்றில் செயற்கை ஏரி உருவாகியுள்ளது. இதனால் பிரம்மபுத்திரா ஆற்றில் 12 முதல் 13 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் வரும் அபாயம் உள்ளதாக சீன அரசு மத்திய அரசுக்கு தகவல் அளித்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அருணாச்சலப்பிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி