உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர், குழந்தையின் காயத்திற்கு பசைவைத்து சிகிச்சை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிறுவனின் காயத்திற்கு தையல் போடாமல், பசை போன்ற ஒன்றை பயன்படுத்தியதை கண்டறிந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அந்த மருத்துவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.