டெல்லி - தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி டெல்லியில் தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.... தொழிற்சாலை கழிவு நீர் தொட்டியில் தொழிலாளர் ஒருவர் மயங்கி உயிரிழந்துள்ளார்... அவரை காப்பாற்றச் சென்ற மற்ற இரு தொழிலாளர்களும் மயங்கி உயிரிழந்துள்ளனர்... கழிவு நீர் தொட்டியில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்... சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்