Bengaluru | School Van Accident | திடீரென திறந்த பள்ளி வேன் பின்பக்க கதவு | கீழே விழுந்த குழந்தைகள் | அதிர்ச்சி வீடியோ திடீரென திறந்த பள்ளி வேன் கதவு - கீழே விழுந்த குழந்தைகள் பெங்களூருவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பள்ளி வேனில் இருந்து 4 குழந்தைகள் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்..... கே.ஆர்.புரம் பகுதியில் தனியார் பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக அதன் பின்பக்க கதவு திடீரென என்று திறந்து கொண்டது. இதில், வேனின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தைகள் நிலைதடுமாறி, ஓடும் வாகனத்தில் இருந்து அடுத்தடுத்து சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதைப் பார்த்த சக மாணவர்கள் பயத்தில் அலறினர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனே வேனை நிறுத்தினார். இந்த விபத்தில் சாலையில் விழுந்த 3 குழந்தைகளுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது...