இந்தியா

பிரம்மபுத்திராவில் அபாய அளவை தாண்டி ஓடும் வெள்ளம் - 40 லட்சம் பேர் மழை வெள்ளத்தால் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் அபாய அளவை தாண்டி ஓடும் வெள்ளத்தால் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்க​ளில் 28 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை வெள்ளத்தில்சிக்கி 76 பேரும், மின்னல் தாக்கி 26 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டாயிரத்து 389 பேர் மீட்கப்பட்டு உள்ள நிலையில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு உள்ள 711 முகாம்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

========

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்