இந்தியா

"நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது" - சந்திரபாபு நாயுடு

நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சந்தித்து பேசினர். சந்திப்பிற்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக கூறினார். ஆபத்திலிருந்து தேசத்தை காக்க வேண்டியது கடமை என்றும் தெரிவித்தார். பின்னர் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமது மாநிலத்தில் காங்கிரஸ், சி.பி.எம். ஆகிய கட்சிகளுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டை பாதுகாக்க, இரு கட்சிகளுடன் தேசிய அளவில் ஒன்றிணைந்து போராட உள்ளதாக கூறினார்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு