இந்தியா

"ஏழைகளின் வீட்டு வாசலுக்கு வங்கிகளை கொண்டு செல்ல முயற்சி" - பிரதமர் மோடி

தந்தி டிவி

"ஏழைகளின் வீட்டு வாசலுக்கு வங்கிகளை கொண்டு செல்ல முயற்சி" - பிரதமர் மோடி

ஏழைகளின் வீட்டு வாசலுக்கு வங்கிகளை கொண்டு செல்லும் முயற்சியை அரசு எடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் மூலை, முடுக்கெல்லாம் டிஜிட்டல் வங்கி சேவை செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் டிஜிட்டல் வங்கி அலகு அமைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் முதற்கட்டமாக, 75 நகரங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் நிதித்துறை அமைச்சர் சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, வங்கி அமைப்பை மேம்படுத்தி வலுப்படுத்துவதாகவும், அதிக நிதியை சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜெர்மனி, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளை காட்டிலும், இந்தியாவில் வங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட மோடி, சாதாரண மனிதர்களின் வாழ்க்கை தரத்தை மாற்ற, இரவு- பகலாக அரசு உழைத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு