ஹிமாச்சலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் பல வீடுகள் தீயில் கருகி நாசகியுள்ளன. ஹிமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள தண்டி கிராமத்தில், நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 20 வீடுகள் எரிந்து நாசமாகின. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆயினும், நான்கு வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியது. நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்