சினிமா

நடிகை திரிஷாவுக்கு எதிரான மேல்முறையீடு மனு தள்ளுபடி

நடிகை திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட 1 புள்ளி 16 கோடி ரூபாய் அபராதம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தந்தி டிவி

2010-11ஆம் நிதியாண்டில் உண்மையான வருமானத்தை மறைத்ததாகக் கூறி, நடிகை திரிஷாவுக்கு 1 கோடி 16 லட்சம் ரூபாய் வருமான வரித்துறை அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நடிகை திரிஷா முறையிட்டார். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், திரிஷாவுக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து வருமான வரித்துறை முதன்மை ஆணையர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, அபராதம் ரத்து செய்த உத்தரவு செல்லும் எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை