இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள 'கொம்புசீவி' திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சரத்குமார், ஒரு திரைப்படம் வெளியாகி திரையரங்கில் 50 நாட்கள் ஓடிய பின்பு, ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று ஓடிடி நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தார்.