கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், கோல்டன் பீகாக் விருதுக்கு, அமரன் திரைப்படம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக, நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி, திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் கோவாவுக்கு புறப்பட்டு சென்றனர். கோல்டன் பீகாக் விருதுக்கு அமரன் படம் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை கௌரமாக கருதுவதாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்தார்.