Mayiladuthurai Incident | மயிலாடுதுறையில்காதலர்கள் உயிரிழந்த விவகாரம் | 5 பேரை தட்டி தூக்கிய போலீசார் காதலர்கள் உயிரிழந்த விவகாரம் - வீடுகளை சூறையாடிய 5 பேர் கைது மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காதலர்கள் உயிரிழந்த விவகாரத்தில், பெண் மற்றும் உறவினர் வீட்டை சேதப்படுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் காதலியான 17 வயது சிறுமி வீடு மற்றும் அவரது உறவினர் ரவிச்சந்திரன் என்பவரது வீட்டை 5 பேர் சேதப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், வீட்டை சேதப்படுத்தியது, பெண்களை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இறந்த காதலன் பார்த்திபன் தரப்பைச் சேர்ந்த கமலஹாசன், ஜெயின் ராஜ், ராஜீ, சுதர்சன், திருமாவளவன் ஆகிய 5 பேரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.