தாறுமாறாக வந்து முதியவரை அடித்து தூக்கிய கார்.. வடமாநில போதை ஆசாமியை மடக்கிய மக்கள்
வடமாநில போதை ஆசாமிகளை மடக்கி பிடித்த பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, வடமாநிலத்தைச் சேர்ந்த போதை ஆசாமிகள் அதிவேகமாக ஓட்டி சென்ற கார், அடுத்தடுத்து கடைகள் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 5-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்றவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது, பொதுமக்கள் திரண்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்